My Village

Wednesday, July 4, 2012

அன்புள்ள அப்பாவுக்கு...

கவிதையென்று நான் எழுத
காகிதத்தை எடுத்தபோதே
உன்னைபற்றி ஒருவார்த்தை, எழுதனுன்னு தோணிடுச்சி...

ஏடு எடுத்து நாங்க படிக்க
எழுத/படிக்க தெரியாத விவசாயி நீ
எங்க எங்க நடந்திருப்ப, எப்பாடு பட்டுருப்ப

பட்டிகாட்டில் பொறந்த நீ - எங்களை
பட்டணத்தில் படிக்கவைக்க
யார் யாரை பார்த்துருப்ப, எப்பாடு பட்டுருப்ப

பொண்ணுகளை படிக்கவைக்க
பொழப்பத்தவன்னு ஊர் பேச
என்ன என்ன நினைச்சுருப்ப, எப்பாடு பட்டுருப்ப

கம்ப்யூட்டர் சென்டர் நான் வைக்க
கடன் வாங்கி கொடுத்ததினால்
கண்டபடி ஊர் பேச, எப்பாடு பட்டுருப்ப...

சாப்பாட்டுக்கு வழியும் இல்லை
சாய்ந்துகொள்ள சாதி/சனமும் இல்லை
என்ன என்ன செய்துருப்ப, எப்பாடு பட்டுருப்ப

எல்லாம் இழந்து ஏழ்மையிலே நின்னபோதும்
என்பிள்ளைகள் உடனிருக்க
எனக்கு என்ன கவலையென்று, இறுமாப்பு பேசுனீங்க...

கண்டியார் பேரபுள்ளைகள் - ஒருவழியா
கரைதேறி வந்துடுச்சி
நீ விதைச்ச விதை, பலன் கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு...

உன்பிள்ளைகள் முன்னேறி வந்தபோது
ஊர் பேச்சும் அடங்கிடுச்சி - கூடவே
உன் மூச்சுக்காற்றும் அடங்கிடுச்சி.

கண்ணீருடன்
இணைய கவிஞர் பத்மநாபன்