
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், காமரசவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோவில் குடமுழுக்கு ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள காமரசவல்லி அருள்மிகு பாலாம்பிகை சமேத சௌந்தரேசுவர சுவாமி கோவில் சுந்தர சோழ மன்னரால் சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்பு (கிபி.957-974) கட்டப்பட்டது. பரிஷத் மகாராஜா பாம்பு தீண்டி இறந்து விட அவரது மகன் ஜனமேஜெயராஜா ...