My Village

Saturday, June 7, 2014

அறிவுரை

முதல் நாள் :

துவாரகா : அப்பா எப்படி இருக்கப்பா? (அம்மா சொல்லிகொடுக்க)
நான் : அப்பா நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?

துவாரகா : நான் நல்ல இருக்கேன்ப்பா. அப்பா சாப்பிடீங்களா?
நான் : அப்பா சாப்பிட போகணும், அப்புறம் பாப்பா அம்மா சொல்லுறதை கேக்குறது இல்லையாம், அம்மா சொல்லுறாங்க, இனிமேல் அம்மா சொல்லுவதை கேக்கணும்....

துவாரகா : அம்மா பாப்பாவுக்கு தூக்கம் வருதுமா.....

மறுநாள் :
நான் : பாப்பா எங்கே போனீங்க?
துவாரகா : பாப்பா விளையாட போனேன்.

நான் : அப்புறம் பாப்பா படிக்கிறதே இல்லையாம், எப்போ பார்த்தாலும் பிங்கு பார்த்துகிட்டு இருக்குறதா அம்மா சொல்லுறாங்க... அப்படி எல்லாம் இருக்ககூடாது பாப்பா படிக்கணும்....
துவாரகா : அம்மா அப்பா போனை வச்சுட்டங்கா....

நான் : துவாரகா அப்பா போனை வைக்கல... பேசிகிட்டு தான் இருக்கேன்....
துவாரகா : அம்மா அப்பா என்னோமோ சொல்லுறாங்க....

அடுத்தநாள்:
நான் : பாப்பா பக்கத்துல இருக்கா?
மனைவி : இங்கதாங்க இருக்கா...

நான் : பாப்பாகிட்ட கொடுங்க...
மனைவி : பாப்பா அப்பா உன்கிட்ட பேசணுமா...

துவாரகா : அம்மா பாப்பா பிஸியா இருக்கேன்....        

0 comments:

Post a Comment