My Village

Monday, January 24, 2011

மண்டை காயும் தத்துவங்கள்

மண்டை காயும் தத்துவங்கள்

 

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,

Rewindலாம் பண்ண முடியாது.

 

T Nagar போனா டீ வாங்கலாம்.

ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

 

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால்...

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

 

நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.

 

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,

முட்டைதான் போடும்.

நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

 

என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா,

திருப்பி அடிக்க முடியாது.

 

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம்

 

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.

 

வேர்கடலை வேர்ல இருந்து வரும்,

அதே மாதிரி

கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

 

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.

 

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,

அவிச்ச முட்டை போடாது.

 

புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,

ஆனா கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்காது.

 

என்னதான் பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும்,

அவருடைய சாவுக்கு அவரால டான்ஸ் ஆட முடியாது.

ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும்,

அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

 

தங்கச்சியோட ஃப்ரெண்ட, ஆசையா தங்கச்சின்னு சொல்ல முடியும்,

ஆனா பொண்டாட்டியோட ஃப்ரெண்ட …..?

 

தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.

என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,

சினிமா Colourல தான் ஓடும்.

 

THANKS : MY DEAR FRIEND G. SANTHOSH –  DLF CITY – CHENNAI

Sunday, January 23, 2011

Good Morning

mailto:sankar_senthil@fwhou.fwc.com

Friday, January 21, 2011

Happy Republic Day.

 

Sunday, January 16, 2011

சொர்க்கம் கண்டவனடா!

வயல்வெளி பார்த்து

வறட்டி தட்டி

ஓணாண் பிடித்து

ஓடையில் குளித்து

எதிர்வீட்டில் விளையாடி

எப்படியோ படித்த நான்

ஏறிவந்தேன் நகரத்துக்கு !

 

 

 

சிறு அறையில் குறுகிப் படுத்து

சில மாதம் போர்தொடுத்து

வாங்கிவிட்ட வேலையோடு

வாழுகிறேன் கணிப்பொறியோடு !

 

 

 

சிறிதாய்த் தூங்கி

கனவு தொலைத்து

காலை உணவு மறந்து

நெரிசலில் சிக்கி

கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன்

காசு பார்க்க !

 

மனசு தொட்டு

வாழும் வாழ்க்கை

மாறிப் போகுமோ ?

 

 

மௌசு தொட்டு

வாழும் வாழ்க்கை

பழகிப் போகுமோ ?

 

வால்பேப்பர் மாற்றியே

வாழ்க்கை

தொலைந்து போகுமோ ?

 

சொந்த பந்த

உறவுகளெல்லாம்

ஷிப் பைலாய்

சுருங்கிப் போகுமோ?

 

வாழ்க்கை

தொலைந்து போகுமோ

மொத்தமும்!

புரியாது

புலம்புகிறேன்

நித்தமும்!

 

தாய் மடியில் தலைவைத்து

நிலவு முகம் நான் ரசித்து

கதைகள் பேசி

கவலைகள் மறந்த காலம்

இனிதான் வருமா ?

 

இதயம் நனைத்த

இந்த வாழ்வு

இளைய தலைமுறைக்காவது

இனி கிடைக்குமா ?

 

 

சொந்த மண்ணில்

சொந்தங்களோடு

சோறு திண்பவன்

யாரடா ?

இருந்தால் அவனே

சொர்க்கம் கண்டவனடா!

 

NANDRI : ELUTHIYA NANBARUKKUM & ANUPPIYA NANBAR GHANDHIKKUM

Wednesday, January 12, 2011

Hello Good Morning.....

When you lift the phone you say Hello....

 

Do you know what is the real meaning of Hello ?

It is the name of a girl !!!

 

YES !!!!!!!!!!!

And do you know who is that girl ??

 

Margaret Hello .....

She was the girlfriend of Grahambell who invented telephone....

 

One can forget the name of Grahambell but not his girlfriend, that is love !!!!!

Monday, January 10, 2011

WISH YOU HAPPY PONGAL

<<Slide5.JPG>>
<<Slide1.JPG>> <<Slide2.JPG>> <<Slide3.JPG>> <<Slide4.JPG>>

Sunday, January 9, 2011

வாழ்க்கையின் வழிகாட்டியாக திருக்குறள்: அப்துல் கலாம்...

ராமேஸ்வரம் : ""எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

 

ராமேஸ்வரம் மண்டபம் ஒன்றியம் எண் 1 நடுநிலைப்பள்ளி வந்த அவர், நூலகம், அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகளை திறந்து வைத்து பேசியதாவது:எனது மனதில் மகிழ்ச்சியான உணர்வு, பூரிப்பை ஏற்படுத்தும் இடம் ராமேஸ்வரம். இப்பள்ளியில் 1937ல் சேர்ந்து, ஆரம்பக் கல்வி முதல் எட்டாவது வரை படித்தேன். உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்.

 

வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்துள்ளேன். நாட்டை வளமான வல்லரசாக உருவாக்க வலியுறுத்தி, மாணவர்களிடம் பேசியுள்ளேன்.அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில் உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

 

Nandri Dinamalar.com