My Village

Sunday, January 16, 2011

சொர்க்கம் கண்டவனடா!

வயல்வெளி பார்த்து

வறட்டி தட்டி

ஓணாண் பிடித்து

ஓடையில் குளித்து

எதிர்வீட்டில் விளையாடி

எப்படியோ படித்த நான்

ஏறிவந்தேன் நகரத்துக்கு !

 

 

 

சிறு அறையில் குறுகிப் படுத்து

சில மாதம் போர்தொடுத்து

வாங்கிவிட்ட வேலையோடு

வாழுகிறேன் கணிப்பொறியோடு !

 

 

 

சிறிதாய்த் தூங்கி

கனவு தொலைத்து

காலை உணவு மறந்து

நெரிசலில் சிக்கி

கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன்

காசு பார்க்க !

 

மனசு தொட்டு

வாழும் வாழ்க்கை

மாறிப் போகுமோ ?

 

 

மௌசு தொட்டு

வாழும் வாழ்க்கை

பழகிப் போகுமோ ?

 

வால்பேப்பர் மாற்றியே

வாழ்க்கை

தொலைந்து போகுமோ ?

 

சொந்த பந்த

உறவுகளெல்லாம்

ஷிப் பைலாய்

சுருங்கிப் போகுமோ?

 

வாழ்க்கை

தொலைந்து போகுமோ

மொத்தமும்!

புரியாது

புலம்புகிறேன்

நித்தமும்!

 

தாய் மடியில் தலைவைத்து

நிலவு முகம் நான் ரசித்து

கதைகள் பேசி

கவலைகள் மறந்த காலம்

இனிதான் வருமா ?

 

இதயம் நனைத்த

இந்த வாழ்வு

இளைய தலைமுறைக்காவது

இனி கிடைக்குமா ?

 

 

சொந்த மண்ணில்

சொந்தங்களோடு

சோறு திண்பவன்

யாரடா ?

இருந்தால் அவனே

சொர்க்கம் கண்டவனடா!

 

NANDRI : ELUTHIYA NANBARUKKUM & ANUPPIYA NANBAR GHANDHIKKUM

0 comments:

Post a Comment