My Village

Tuesday, February 1, 2011

உயிர்

உயிர்,

உலகேழு அதிசயங்களில்

இணைக்கப்பட மறந்த

இணையில்லா அதிசயம்....

 

மாயைகளின் பிடியில்

உடல் சிக்கித்தவிக்க,

உடற்பையில் காற்றாய்

உந்தப்பட்டிருக்கிறது....

 

இப்பிறப்பில் இறைவன்

இனாமாக அருளிய உடலில்,

கடனாக நிரப்பிய காற்றே

உயிர்....

முடியின் முதிர்ச்சி ,

திரையின் தளர்ச்சி,

பற்களின் தற்கொலை,

இவையனைத்தும் ,

தவணை முடிந்துவிட்டது

கடனை திருப்பித் தா! என்று

இறைவன் இடும்

ஞாபகக் கடிதங்கள்!

 

உயிரே!

நீ திட திரவமற்ற

வாயுவாக இருப்பதால்தான் ,

கைக்குள் சிக்காமல்

சிறு கணத்தில்

ஒரு பிணத்தை வீழ்த்துகிறாய்,

இம்மண்ணில்.....!

 

இவ்வம்பரத்தில் ஜீவிக்கும்

ஜீவிகளுக்கெல்லாம் நீ

ஜீவனாம்சம் வழங்காவிடில்

எல்லாப் பெயர்களும்

ரணமாகிப் பிணமாகும்

உன்னால்!!!

 

Nandri : Nanbar – Mr. Murali and Eluthiya Nanbarukku

0 comments:

Post a Comment