My Village

Wednesday, July 4, 2012

அன்புள்ள அப்பாவுக்கு...

கவிதையென்று நான் எழுத காகிதத்தை எடுத்தபோதே உன்னைபற்றி ஒருவார்த்தை, எழுதனுன்னு தோணிடுச்சி... ஏடு எடுத்து நாங்க படிக்க எழுத/படிக்க தெரியாத விவசாயி நீ எங்க எங்க நடந்திருப்ப, எப்பாடு பட்டுருப்ப… பட்டிகாட்டில் பொறந்த நீ - எங்களை பட்டணத்தில் படிக்கவைக்க யார் யாரை பார்த்துருப்ப, எப்பாடு பட்டுருப்ப… பொண்ணுகளை படிக்கவைக்க பொழப்பத்தவன்னு ஊர் பேச என்ன...

Saturday, June 30, 2012

ஏன் சிரித்தாய்

வழக்கம் போல் - அழைக்கும்தொலைபேசி அழைப்பு.ஆனால் வழக்கம் போல்முடியவில்லை – இந்த அழைப்பு.ஏன்? என்ன பிரச்சனை? என்ன மாற்றம்?ஏன் இந்த சோகம் கலந்த குரல்?எதிர் முனையில் குரல் "மகள் சிரிக்கிறாள்"என்னிடம் இருந்து அழைப்பு வந்தால் மட்டும்.சந்தோசப்பட வேண்டிய செய்திக்குஎதற்கு இந்த சோகம், இல்லைஅவள் சிரிப்புக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்நினைத்து பார்தேன் சந்தோசம் பறந்துவிட்டது.பக்கத்தில் இருந்து பார்த்துகொள்ள வேண்டியவன்பலநூறு மைல்களுக்கு அப்பால் இருந்துகவிதை...

Wednesday, June 27, 2012

பசிக்கிறது

பசிக்கிறது - உண்மையாக பசி வயிற்க்கா - இல்லை அறிவுக்கா. இலக்கியம் பேச  - இது நேரமல்ல உண்மையில் பசிக்கிறது இங்கு எல்லாம் கிடைக்கும் என வந்தவனுக்கு - ஏன் பசிக்கிறது. பசிக்குது என்றவுடன் குளிச்சிட்டு வாடா சாப்பிடலாம் என்று கண்டிப்புடன் கூற பக்கத்தில் அப்பா இல்லை. குளிக்கிரானாம் சாப்பிடுடா தம்பி பிறகு பாக்கலாம் என்று பாசத்துடன் சொல்ல பக்கத்தில் அம்மா இல்லை. சாப்பாட்டை விட...

Tuesday, June 26, 2012

எனக்கும் ஆசை

எல்லோரும் கவிதை எழுத இவனுக்கும் கவிதை எழுத ஆசை. எதைப்பற்றி, எப்படி, என்ன - எழுத எதுவும் தெரியாது - ஆனால்  கவிதை எழுத ஆசை. கவிதை எழுத - முதலில்  எதுகை மோனை இலக்கணம் தெரியவேண்டும் இது எதுவும் தெரியாது - ஆனால்  கவிதை எழுத ஆசை. தெரிந்த வார்த்தைகளை எல்லாம் மடக்கி எழுதினால் அதுவே கவிதை - அப்படியாகின் எனக்கும் கவிதை எழுத ஆசை. கவிதை...