My Village

Wednesday, June 27, 2012

பசிக்கிறது



பசிக்கிறது - உண்மையாக
பசி வயிற்க்கா - இல்லை அறிவுக்கா.

இலக்கியம் பேச  - இது
நேரமல்ல உண்மையில் பசிக்கிறது
இங்கு எல்லாம் கிடைக்கும்
என வந்தவனுக்கு - ஏன் பசிக்கிறது.

பசிக்குது என்றவுடன்
குளிச்சிட்டு வாடா சாப்பிடலாம்
என்று கண்டிப்புடன் கூற
பக்கத்தில் அப்பா இல்லை.

குளிக்கிரானாம் சாப்பிடுடா தம்பி
பிறகு பாக்கலாம் என்று பாசத்துடன் சொல்ல
பக்கத்தில் அம்மா இல்லை.

சாப்பாட்டை விட என்ன வேலை
வேண்டி கிடக்கு என்று கடிந்துகொள்ள
பக்கத்தில் மனைவி இல்லை.

நீயெல்லாம் எத்தனை சொன்னாலும்
திருந்தமாட்ட என்று தன் பங்குக்கு பேச
பக்கத்தில் அக்கா இல்லை.

பேச்சு எல்லாம் அப்புறம் முதலில்
சாப்பாடு என்று உடன் அமர
பக்கத்தில் தம்பி இல்லை.

இன்னும் கொஞ்சம் சாப்பிடுண்ணே
என்று பரிமாற
பக்கத்தில் தங்கை இல்லை.

இப்படி எதுவும் இல்லாத - உலகத்தில்
எல்லாம் இருப்பதாக வாயார பொய் பேசுறோம்.

அங்கு ஒருவன் பசிக்கு - எத்தனை குரல்
அதே பசிதான் - இங்கு

அன்புடன்
இணைய கவிஞர் பத்மநாபன்.

0 comments:

Post a Comment