My Village

Saturday, June 30, 2012

ஏன் சிரித்தாய்


வழக்கம் போல் - அழைக்கும்
தொலைபேசி அழைப்பு.
ஆனால் வழக்கம் போல்
முடியவில்லை – இந்த அழைப்பு.

ஏன்? என்ன பிரச்சனை? என்ன மாற்றம்?
ஏன் இந்த சோகம் கலந்த குரல்?
எதிர் முனையில் குரல் "மகள் சிரிக்கிறாள்"
என்னிடம் இருந்து அழைப்பு வந்தால் மட்டும்.

சந்தோசப்பட வேண்டிய செய்திக்கு
எதற்கு இந்த சோகம், இல்லை
அவள் சிரிப்புக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்
நினைத்து பார்தேன் சந்தோசம் பறந்துவிட்டது.

பக்கத்தில் இருந்து பார்த்துகொள்ள வேண்டியவன்
பலநூறு மைல்களுக்கு அப்பால் இருந்து
கவிதை எழுதுகிறான் - என்பதை
நினைத்து சிரித்தாயோ?

கண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொள்ள வேண்டியவன்
கண் இமைக்கும் நேரத்தில்
வந்து பார்த்து செல்கிறான் - என்பதை
நினைத்து சிரித்தாயோ?

பச்சை புல்வெளியில் தன்னுடன்
பட்டாம்பூச்சி பிடித்து விளையாட வேண்டியவன்
பாலைவனத்தில் பகல்/இரவாய் உழைக்கிறான் - என்பதை
நினைத்து சிரித்தாயோ?

தன் கைபிடித்து கற்பிக்க வேண்டிய
தகப்பன் இணையவழி கற்பிக்க
தொழில்நுட்டபத்தை தேடுகிறான் - என்பதை
நினைத்து சிரித்தாயோ?

எப்போது சொல்வாயடி தங்கம்
என் அழைப்பிற்கு மட்டும்
ஏன் சிரித்தாய் என்பதை...

அன்புடன்
இணைய கவிஞர் பத்மநாபன்

0 comments:

Post a Comment