My Village

Tuesday, June 26, 2012

எனக்கும் ஆசை


எல்லோரும் கவிதை எழுத
இவனுக்கும் கவிதை எழுத ஆசை.

எதைப்பற்றி, எப்படி, என்ன எழுத
எதுவும் தெரியாது - ஆனால் 
கவிதை எழுத ஆசை.

கவிதை எழுத - முதலில் 
எதுகை மோனை இலக்கணம் தெரியவேண்டும்
இது எதுவும் தெரியாது - ஆனால் 
கவிதை எழுத ஆசை.

தெரிந்த வார்த்தைகளை எல்லாம்
மடக்கி எழுதினால் அதுவே கவிதை - அப்படியாகின்
எனக்கும் கவிதை எழுத ஆசை.

கவிதை என்றால் அதில்
பொருள் இருக்கவேண்டும் - என்னபொருள்
இதுகூட தெரியாத எனக்கும்
கவிதை எழுத ஆசை.

பொருள் என்பது - உன்னுடைய
கவிதை எதையாவது ஒன்றை பற்றி பேசினால்
அந்த ஒன்றே பொருள்.

அப்படியாகின் எனக்கு கவிதை எழுத
தெரியாததை பற்றி பேசியதால்
இதுவும் கவிதை யாகுமோ?

இதுவும் கவிதையாகின்
இதுபோல பல கவிதை எழுத
எனக்கும் ஆசை.

அன்புடன்
இணைய கவிஞர் பத்மநாபன்


0 comments:

Post a Comment