My Village

Sunday, April 24, 2011

Wish you Happy Easter

 

Friday, April 15, 2011

சொர்க்கம்

வயல் வெளி பார்த்து வரட்டி தட்டி

ஓணான் பிடித்து ஓடையில் குளித்து

எப்படியோ படித்த நான்

 

ஏறி வந்தேன் நகரத்திற்கு! சிறு அறையில்

குறிகி படுத்து

சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட

வேலையோடு வாழ்கிறேன்

 

கணிபொறியோடு! சிறியதாய் தூங்கி

கனவு தொலைத்து காலை

உணவு மறந்து

 

நெரிசலில் சிக்கி கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன் காசு பார்க்க...

மனசு

தொட்டு வாழும்

வாழ்க்கை மாறிப்போகுமோ மௌசு

தொட்டு வாழும் வாழ்க்கை

பழகிபோகுமோ... வால் பேப்பர்

மாற்றியே

வாழ்க்கை தொலைந்துபோகுமோ

 

 

சொந்தபந்த உறவுகளெல்லாம் ஜிப்

பைலாய் சுரிங்கிபோகுமோ... தாய்

மடியில்

 

தலைவைத்து நிலவு முகம் நான் ரசித்து

கதைகள் பேசி கவலைகள் மறந்த

காலம் இனிதான் வருமா...?

 

இதயம் நனைத்த இந்த வாழ்வு இளைய

தலைமுறைக்காவது இனி

கிடைக்குமா? சொந்த

 

மண்ணில் சொந்தங்களோடு சோறு

தின்பவன் யாரடா?

இருந்தால் அவனே சொர்க்கம்

கண்டவனடா...

 

Nandri : Eluthiya Nanbarukku athai anuppiya Nanbar Mani – Dubaikkum.

 

Sunday, February 13, 2011

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலைக் கல்லூரியில் நடந்த விழாவில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புடைய 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை "ஜீரோ' என்ற கேள்விக்கு சரியான பதிலளித்த மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

 

கீழக்கரை அருகே உள்ள முத்துப்பேட்டை கவுசானல் கலை கல்லூரி நிறுவன தின விழா, கல்லூரி செயலாளர் ஜெயராஜ் தலைமையிலும், முதல்வர் ஞானப்பிரகாசம் முன்னிலையிலும் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை ஆடிட்டர் ஜெரால்டு எபினேசர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நகைச்சுவையுடன் பேசினார். அப்போது அவர் ,"" 1.76 லட்சம் கோடி ரூபாயில் எத்தனை ஜீரோக்கள் உள்ளது, என்பதை தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக,'' கூறினார்.

 

இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டாலும், நீண்டநேரமாக யாரும் பதிலளிக்கவில்லை. அப்போது மாணவி ஆனந்தி ,"10 ஜீரோ,'' என , பதிலளித்தார். பலத்த கரகோஷங்களுக்கிடையே மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய ஆடிட்டர், "" கடந்த சில நாட்களுக்கு முன் "தினமலர் ' இதழின் முதல் பக்கத்தில் இதற்கான பதில் தெளிவாக வெளியிடப்பட்டதாக,'' தெரிவித்தார்.

 

 

Thursday, February 10, 2011

A BEAUTIFUL STORY - "Self Appraisal"

Tuesday, February 1, 2011

GOOD MORNING

Destiny is not a matter of chance,

it is a matter of choice;

it is not a thing to be waited for,

it is a thing to be achieved.

உயிர்

உயிர்,

உலகேழு அதிசயங்களில்

இணைக்கப்பட மறந்த

இணையில்லா அதிசயம்....

 

மாயைகளின் பிடியில்

உடல் சிக்கித்தவிக்க,

உடற்பையில் காற்றாய்

உந்தப்பட்டிருக்கிறது....

 

இப்பிறப்பில் இறைவன்

இனாமாக அருளிய உடலில்,

கடனாக நிரப்பிய காற்றே

உயிர்....

முடியின் முதிர்ச்சி ,

திரையின் தளர்ச்சி,

பற்களின் தற்கொலை,

இவையனைத்தும் ,

தவணை முடிந்துவிட்டது

கடனை திருப்பித் தா! என்று

இறைவன் இடும்

ஞாபகக் கடிதங்கள்!

 

உயிரே!

நீ திட திரவமற்ற

வாயுவாக இருப்பதால்தான் ,

கைக்குள் சிக்காமல்

சிறு கணத்தில்

ஒரு பிணத்தை வீழ்த்துகிறாய்,

இம்மண்ணில்.....!

 

இவ்வம்பரத்தில் ஜீவிக்கும்

ஜீவிகளுக்கெல்லாம் நீ

ஜீவனாம்சம் வழங்காவிடில்

எல்லாப் பெயர்களும்

ரணமாகிப் பிணமாகும்

உன்னால்!!!

 

Nandri : Nanbar – Mr. Murali and Eluthiya Nanbarukku

Tuesday, January 25, 2011

கடி ஜோக்ஸ்

மாணவன் 1 ஏணடா தண்ணியிலிருந்து மின்சாரம் எடுக்குறாங்க?

 

மாணவன் 2 இல்லன்னா குளிக்கும் போது சாக் அடிக்கும் அதனாலதான்

 

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?

 

என்ன போகும்னு தெரிஞ்சா மறுபதிவாக இடுங்கள்...!

 

 

கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?

என்ன வித்தியாசம் ?

மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது

==========

நகை போடாம இருக்கிறதே மேல்

ஏன் ?

நகை போடுவது ஃபீமேல்

==========

தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?

என்ன செய்வாங்க ?

முழிச்சிருப்பாங்க

==========

தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?

ஏன் ?

அதைச் சுடுகிறார்கள்

==========

ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?

என்ன ?

இறங்கி

==========

ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு

நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?

==========

 

இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...

அவ்வளவு கஷ்டமான கதையா ?

ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்

 

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?

அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

-------------------------------------------------------------------------------

 

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

--------------------------------------------------------------------------------

 

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

கிரண் : தெரியலியே?

கரண் : சுவரொட்டி - தான்.

கிரண் : ?????????

 

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"

 

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு

அவசரப்படுத்தினாரு எசமான்..!"

-------------------------------------------

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

 

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

 

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,

ஐயா.