My Village

Tuesday, January 25, 2011

கடி ஜோக்ஸ்

மாணவன் 1 ஏணடா தண்ணியிலிருந்து மின்சாரம் எடுக்குறாங்க?

 

மாணவன் 2 இல்லன்னா குளிக்கும் போது சாக் அடிக்கும் அதனாலதான்

 

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?

 

என்ன போகும்னு தெரிஞ்சா மறுபதிவாக இடுங்கள்...!

 

 

கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?

என்ன வித்தியாசம் ?

மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது

==========

நகை போடாம இருக்கிறதே மேல்

ஏன் ?

நகை போடுவது ஃபீமேல்

==========

தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?

என்ன செய்வாங்க ?

முழிச்சிருப்பாங்க

==========

தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?

ஏன் ?

அதைச் சுடுகிறார்கள்

==========

ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?

என்ன ?

இறங்கி

==========

ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு

நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?

==========

 

இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...

அவ்வளவு கஷ்டமான கதையா ?

ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்

 

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?

அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

-------------------------------------------------------------------------------

 

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

--------------------------------------------------------------------------------

 

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

கிரண் : தெரியலியே?

கரண் : சுவரொட்டி - தான்.

கிரண் : ?????????

 

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"

 

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு

அவசரப்படுத்தினாரு எசமான்..!"

-------------------------------------------

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

 

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

 

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,

ஐயா.

Monday, January 24, 2011

குறுந்தகவல் குறும்புகள்

"அளவு குறைஞ்சா ரேஷன்

ஆடை குறைஞ்சா பேஷன்

எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்

உன்னையும் படைச்சானே... ஈசன்"

 

 

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா

சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.

பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி

இதுவரை முப்பத்தஞ்சு சவரன்

தங்கம் வாங்கியிருக்கியே!"

 

 

*பங்காளி...

நீ உன் மனைவியை

'நின்னா குத்துவிளக்கு...

உட்கார்ந்தா நெய்விளக்கு...

அசைஞ்சா அகல்விளக்கு...

அண்ணாந்தா காமாட்சி விளக்கு...

பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே...

ஏன் சொல்ல மாட்டே?

உன் மாமனார், நீ கேட்டதெல்லாம்

கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே!

 

 

சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.

 

மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?

 

சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!

 

 

விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

 

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

 

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........

 

===============

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

செல்லினில் பைசா குறயட்டுமே!

ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே!

எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!

டார்ச்சர் தாங்கல பாவா!

 

குணா கமல்...

சேது விக்ரம்...

சின்னதம்பி பிரபு...

சின்ன ஜமீன் கார்த்திக்...

மூளை வளர்ச்சியில்லாம

முன்னுக்கு வந்தவங்க

நிறய பேரு இருக்காங்க.

நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

 

 

இசைஞானி, இசைப்புயல்,

தேனிசைத் தென்றல் எல்லாரயும்

மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!

குறட்டச் சத்தம் தாங்கலடா!

 

 

அன்று... அண்ணலும் நோக்கினான்.

அவளும் நோக்கினாள்!

இன்று... அவனும் நோக்கியா.

அவளும் நோக்கியா!

மண்டை காயும் தத்துவங்கள்

மண்டை காயும் தத்துவங்கள்

 

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,

Rewindலாம் பண்ண முடியாது.

 

T Nagar போனா டீ வாங்கலாம்.

ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

 

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால்...

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

 

நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.

 

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,

முட்டைதான் போடும்.

நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

 

என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா,

திருப்பி அடிக்க முடியாது.

 

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம்

 

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.

 

வேர்கடலை வேர்ல இருந்து வரும்,

அதே மாதிரி

கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

 

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.

 

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,

அவிச்ச முட்டை போடாது.

 

புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,

ஆனா கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்காது.

 

என்னதான் பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும்,

அவருடைய சாவுக்கு அவரால டான்ஸ் ஆட முடியாது.

ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும்,

அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

 

தங்கச்சியோட ஃப்ரெண்ட, ஆசையா தங்கச்சின்னு சொல்ல முடியும்,

ஆனா பொண்டாட்டியோட ஃப்ரெண்ட …..?

 

தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.

என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,

சினிமா Colourல தான் ஓடும்.

 

THANKS : MY DEAR FRIEND G. SANTHOSH –  DLF CITY – CHENNAI

Sunday, January 23, 2011

Good Morning

mailto:sankar_senthil@fwhou.fwc.com

Friday, January 21, 2011

Happy Republic Day.

 

Sunday, January 16, 2011

சொர்க்கம் கண்டவனடா!

வயல்வெளி பார்த்து

வறட்டி தட்டி

ஓணாண் பிடித்து

ஓடையில் குளித்து

எதிர்வீட்டில் விளையாடி

எப்படியோ படித்த நான்

ஏறிவந்தேன் நகரத்துக்கு !

 

 

 

சிறு அறையில் குறுகிப் படுத்து

சில மாதம் போர்தொடுத்து

வாங்கிவிட்ட வேலையோடு

வாழுகிறேன் கணிப்பொறியோடு !

 

 

 

சிறிதாய்த் தூங்கி

கனவு தொலைத்து

காலை உணவு மறந்து

நெரிசலில் சிக்கி

கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன்

காசு பார்க்க !

 

மனசு தொட்டு

வாழும் வாழ்க்கை

மாறிப் போகுமோ ?

 

 

மௌசு தொட்டு

வாழும் வாழ்க்கை

பழகிப் போகுமோ ?

 

வால்பேப்பர் மாற்றியே

வாழ்க்கை

தொலைந்து போகுமோ ?

 

சொந்த பந்த

உறவுகளெல்லாம்

ஷிப் பைலாய்

சுருங்கிப் போகுமோ?

 

வாழ்க்கை

தொலைந்து போகுமோ

மொத்தமும்!

புரியாது

புலம்புகிறேன்

நித்தமும்!

 

தாய் மடியில் தலைவைத்து

நிலவு முகம் நான் ரசித்து

கதைகள் பேசி

கவலைகள் மறந்த காலம்

இனிதான் வருமா ?

 

இதயம் நனைத்த

இந்த வாழ்வு

இளைய தலைமுறைக்காவது

இனி கிடைக்குமா ?

 

 

சொந்த மண்ணில்

சொந்தங்களோடு

சோறு திண்பவன்

யாரடா ?

இருந்தால் அவனே

சொர்க்கம் கண்டவனடா!

 

NANDRI : ELUTHIYA NANBARUKKUM & ANUPPIYA NANBAR GHANDHIKKUM

Wednesday, January 12, 2011

Hello Good Morning.....

When you lift the phone you say Hello....

 

Do you know what is the real meaning of Hello ?

It is the name of a girl !!!

 

YES !!!!!!!!!!!

And do you know who is that girl ??

 

Margaret Hello .....

She was the girlfriend of Grahambell who invented telephone....

 

One can forget the name of Grahambell but not his girlfriend, that is love !!!!!

Monday, January 10, 2011

WISH YOU HAPPY PONGAL

<<Slide5.JPG>>
<<Slide1.JPG>> <<Slide2.JPG>> <<Slide3.JPG>> <<Slide4.JPG>>

Sunday, January 9, 2011

வாழ்க்கையின் வழிகாட்டியாக திருக்குறள்: அப்துல் கலாம்...

ராமேஸ்வரம் : ""எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

 

ராமேஸ்வரம் மண்டபம் ஒன்றியம் எண் 1 நடுநிலைப்பள்ளி வந்த அவர், நூலகம், அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகளை திறந்து வைத்து பேசியதாவது:எனது மனதில் மகிழ்ச்சியான உணர்வு, பூரிப்பை ஏற்படுத்தும் இடம் ராமேஸ்வரம். இப்பள்ளியில் 1937ல் சேர்ந்து, ஆரம்பக் கல்வி முதல் எட்டாவது வரை படித்தேன். உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்.

 

வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்துள்ளேன். நாட்டை வளமான வல்லரசாக உருவாக்க வலியுறுத்தி, மாணவர்களிடம் பேசியுள்ளேன்.அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில் உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

 

Nandri Dinamalar.com

 

Friday, January 7, 2011

Good Morning

 Smile is the Lighting system of a Face,

Cooling system of Heart,

Boosting system of Mind...

So keep smiling always my dear friend!!

Have A Fabulous Day Ahead...

Thursday, January 6, 2011

Exclusive: Freedom of Choice (Mobile no. Switch over)Starts from Jan 20th across India

    This New Year Freedom of Choice Starts @ Just 19 across India
    Starting Jan 20th 2011

TIMES OF INDIA - JOB VACENCY ADVERTISEMENT (INDIA & OVERSEAS)

<<TOIM_2011_1_5_45.jpg>>
<<TOIM_2011_1_5_46.jpg>>

Tuesday, January 4, 2011

மரங்களை வெட்டுங்கள் (???!!!)

மரங்களை வெட்டுங்கள்

 

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

 

மண்ணின் வில்லன்:

 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! ) 

 நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

 

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

 

இதன் கொடூரமான குணங்கள்

 

இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

 

 

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

 

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

 

உடம்பு முழுதும் விஷம்

 

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

 

 

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

 

 

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.

 

 

அறியாமை

 

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

 

கேரளாவின் விழிப்புணர்வு

 

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

 

ஆராய்ச்சியாளர்களும்இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

 

நல்ல மரம் ஆரோக்கியம்

 

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .

 

 

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

 

 

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

 

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

 

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!  நம் மண்ணின் மாண்பை காப்போம்..!

 

Nandri : ENTHA PATHIVAI ELUTHIYA NANBANUKKU…