My Village

Sunday, February 13, 2011

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலைக் கல்லூரியில் நடந்த விழாவில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புடைய 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை "ஜீரோ' என்ற கேள்விக்கு சரியான பதிலளித்த மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

 

கீழக்கரை அருகே உள்ள முத்துப்பேட்டை கவுசானல் கலை கல்லூரி நிறுவன தின விழா, கல்லூரி செயலாளர் ஜெயராஜ் தலைமையிலும், முதல்வர் ஞானப்பிரகாசம் முன்னிலையிலும் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை ஆடிட்டர் ஜெரால்டு எபினேசர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நகைச்சுவையுடன் பேசினார். அப்போது அவர் ,"" 1.76 லட்சம் கோடி ரூபாயில் எத்தனை ஜீரோக்கள் உள்ளது, என்பதை தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக,'' கூறினார்.

 

இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டாலும், நீண்டநேரமாக யாரும் பதிலளிக்கவில்லை. அப்போது மாணவி ஆனந்தி ,"10 ஜீரோ,'' என , பதிலளித்தார். பலத்த கரகோஷங்களுக்கிடையே மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய ஆடிட்டர், "" கடந்த சில நாட்களுக்கு முன் "தினமலர் ' இதழின் முதல் பக்கத்தில் இதற்கான பதில் தெளிவாக வெளியிடப்பட்டதாக,'' தெரிவித்தார்.

 

 

Thursday, February 10, 2011

A BEAUTIFUL STORY - "Self Appraisal"

Tuesday, February 1, 2011

GOOD MORNING

Destiny is not a matter of chance,

it is a matter of choice;

it is not a thing to be waited for,

it is a thing to be achieved.

உயிர்

உயிர்,

உலகேழு அதிசயங்களில்

இணைக்கப்பட மறந்த

இணையில்லா அதிசயம்....

 

மாயைகளின் பிடியில்

உடல் சிக்கித்தவிக்க,

உடற்பையில் காற்றாய்

உந்தப்பட்டிருக்கிறது....

 

இப்பிறப்பில் இறைவன்

இனாமாக அருளிய உடலில்,

கடனாக நிரப்பிய காற்றே

உயிர்....

முடியின் முதிர்ச்சி ,

திரையின் தளர்ச்சி,

பற்களின் தற்கொலை,

இவையனைத்தும் ,

தவணை முடிந்துவிட்டது

கடனை திருப்பித் தா! என்று

இறைவன் இடும்

ஞாபகக் கடிதங்கள்!

 

உயிரே!

நீ திட திரவமற்ற

வாயுவாக இருப்பதால்தான் ,

கைக்குள் சிக்காமல்

சிறு கணத்தில்

ஒரு பிணத்தை வீழ்த்துகிறாய்,

இம்மண்ணில்.....!

 

இவ்வம்பரத்தில் ஜீவிக்கும்

ஜீவிகளுக்கெல்லாம் நீ

ஜீவனாம்சம் வழங்காவிடில்

எல்லாப் பெயர்களும்

ரணமாகிப் பிணமாகும்

உன்னால்!!!

 

Nandri : Nanbar – Mr. Murali and Eluthiya Nanbarukku

Tuesday, January 25, 2011

கடி ஜோக்ஸ்

மாணவன் 1 ஏணடா தண்ணியிலிருந்து மின்சாரம் எடுக்குறாங்க?

 

மாணவன் 2 இல்லன்னா குளிக்கும் போது சாக் அடிக்கும் அதனாலதான்

 

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?

 

என்ன போகும்னு தெரிஞ்சா மறுபதிவாக இடுங்கள்...!

 

 

கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?

என்ன வித்தியாசம் ?

மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது

==========

நகை போடாம இருக்கிறதே மேல்

ஏன் ?

நகை போடுவது ஃபீமேல்

==========

தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?

என்ன செய்வாங்க ?

முழிச்சிருப்பாங்க

==========

தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?

ஏன் ?

அதைச் சுடுகிறார்கள்

==========

ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?

என்ன ?

இறங்கி

==========

ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு

நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?

==========

 

இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...

அவ்வளவு கஷ்டமான கதையா ?

ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்

 

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?

அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

-------------------------------------------------------------------------------

 

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

--------------------------------------------------------------------------------

 

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

கிரண் : தெரியலியே?

கரண் : சுவரொட்டி - தான்.

கிரண் : ?????????

 

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"

 

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு

அவசரப்படுத்தினாரு எசமான்..!"

-------------------------------------------

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

 

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

 

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,

ஐயா.

Monday, January 24, 2011

குறுந்தகவல் குறும்புகள்

"அளவு குறைஞ்சா ரேஷன்

ஆடை குறைஞ்சா பேஷன்

எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்

உன்னையும் படைச்சானே... ஈசன்"

 

 

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா

சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.

பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி

இதுவரை முப்பத்தஞ்சு சவரன்

தங்கம் வாங்கியிருக்கியே!"

 

 

*பங்காளி...

நீ உன் மனைவியை

'நின்னா குத்துவிளக்கு...

உட்கார்ந்தா நெய்விளக்கு...

அசைஞ்சா அகல்விளக்கு...

அண்ணாந்தா காமாட்சி விளக்கு...

பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே...

ஏன் சொல்ல மாட்டே?

உன் மாமனார், நீ கேட்டதெல்லாம்

கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே!

 

 

சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.

 

மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?

 

சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!

 

 

விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

 

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

 

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........

 

===============

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

செல்லினில் பைசா குறயட்டுமே!

ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே!

எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!

டார்ச்சர் தாங்கல பாவா!

 

குணா கமல்...

சேது விக்ரம்...

சின்னதம்பி பிரபு...

சின்ன ஜமீன் கார்த்திக்...

மூளை வளர்ச்சியில்லாம

முன்னுக்கு வந்தவங்க

நிறய பேரு இருக்காங்க.

நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

 

 

இசைஞானி, இசைப்புயல்,

தேனிசைத் தென்றல் எல்லாரயும்

மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!

குறட்டச் சத்தம் தாங்கலடா!

 

 

அன்று... அண்ணலும் நோக்கினான்.

அவளும் நோக்கினாள்!

இன்று... அவனும் நோக்கியா.

அவளும் நோக்கியா!

மண்டை காயும் தத்துவங்கள்

மண்டை காயும் தத்துவங்கள்

 

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,

Rewindலாம் பண்ண முடியாது.

 

T Nagar போனா டீ வாங்கலாம்.

ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

 

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால்...

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

 

நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.

 

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,

முட்டைதான் போடும்.

நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

 

என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா,

திருப்பி அடிக்க முடியாது.

 

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம்

 

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.

 

வேர்கடலை வேர்ல இருந்து வரும்,

அதே மாதிரி

கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

 

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.

 

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,

அவிச்ச முட்டை போடாது.

 

புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,

ஆனா கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்காது.

 

என்னதான் பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும்,

அவருடைய சாவுக்கு அவரால டான்ஸ் ஆட முடியாது.

ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும்,

அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

 

தங்கச்சியோட ஃப்ரெண்ட, ஆசையா தங்கச்சின்னு சொல்ல முடியும்,

ஆனா பொண்டாட்டியோட ஃப்ரெண்ட …..?

 

தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.

என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,

சினிமா Colourல தான் ஓடும்.

 

THANKS : MY DEAR FRIEND G. SANTHOSH –  DLF CITY – CHENNAI